ஆப்நகரம்

பசில் ராஜபக்சே 3வது முறையாக கைது!

இலங்கையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே 3வது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 6 Jun 2016, 4:09 pm
இலங்கையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே 3வது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil sri lanka basil rajapaksa arrested by fcid
பசில் ராஜபக்சே 3வது முறையாக கைது!


முந்தைய ஆட்சிக்காலத்தில் பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே மீது ஏராளமான நில அபகரிப்பு மற்றும் நிதி மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்ட பசில், இன்று 3வது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா நில அபகரிப்பு மோசடி வழக்கின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறிசேனா அதிபரான பின்னர், ராஜபக்சே குடும்பத்தினர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி