ஆப்நகரம்

இலங்கையில் புது அமைச்சரவை : போலீஸ் துறையை தன் வசம் வைத்துக் கொண்ட அதிபர்!

கொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.

Samayam Tamil 21 Dec 2018, 1:37 pm
கொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.
Samayam Tamil 6


இலங்கை பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை, கடந்த அக்டோபர் 26ம் தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். தொடர்ந்து முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.
இதனால் இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டத.

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் முட்டுக்கட்டை போட்டது. இதன் தொடர்ச்சியாக 30 நபர் கொண்ட புது அமைச்சரவை இலங்கையில் நேற்று பதவியேற்றுக் கொண்டது. இதில் ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் உள்ளனர்.
முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டது. அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை, போலீஸ் துறையை பிரதமர் ரனில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இது அதிபர், பிரதமர் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

அடுத்த செய்தி