ஆப்நகரம்

இலங்கை: தூங்கி விழுந்த டிரைவரால், 3 இந்தியர்கள் பலி!

இலங்கையில் சாலை விபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட மொத்தம் 4 பேர் பலி.

Samayam Tamil 24 Dec 2019, 4:55 pm
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிவேக சாலையில் நிகழ்ந்த கொடூர விபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil broken_glass


இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் குழு ஒன்று சுற்றுலாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுற்றுலா சென்றவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்க்க, அங்குத் தனியார் வேன் ஒன்றை வாடகைக்குப் பிடித்துள்ளனர். அந்த வேனில் கொழும்புவை சுற்றியுள்ள இடங்களுக்குச் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஜப்பானை உலுக்கிய பாலியல் வழக்கு...

அதன்படி சுற்றுலாவுக்குப் புறப்பட்டுள்ளனர். அந்த வேனை கொழும்புவை சேர்ந்த சாரதி என்பவர் இயக்கியுள்ளார். சாரதி சமீப நாட்களாக தொடர் பணி சூழல் காரணமாக அசதியாகக் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த வேன் கொழும்புவையும், தென் பகுதி மாத்தறை நகரத்தையும் இணைக்கும் அதிவேக சாலையில் சென்றுள்ளது.

வாகனத்தை இயக்கிய சாரதி அசதியில் தூங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது. இதனால், வேன் முன் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 6 இந்தியர்களை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் விபத்தில் படுகாயமடைந்த சாரதி, சம்பவ இடத்திலே பலியாகினார்.

டிக் டாக் பயன்படுத்த தடை..! எச்சரிக்கை விடும் அமெரிக்கா...

சிகிச்சை பலனின்றி 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த கொடூர விபத்து குறித்து இலங்கை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூங்கியதாலே நிகழ்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி