ஆப்நகரம்

இலங்கையில் மலைத்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

இலங்கை மலையகத்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TNN 27 Sep 2016, 2:55 am
இலங்கை மலையகத்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil sri lanka estate workers started to protest
இலங்கையில் மலைத்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!


அந்நாட்டின் மலையகப் பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இவற்றில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், வாரந்தோறும் தங்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களை 3ல் இருந்து, 6 நாட்களாக உயர்த்தவும், ஊதிய உயர்வை அமல்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி அரசு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய பயன் இல்லாததால், தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்ட வழிகளில் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வரும் தோட்ட தொழிலாளர்கள், இலங்கை அரசு தங்களது கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி