ஆப்நகரம்

ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு- பாதுகாப்பு அமைச்சருக்கே ஆப்பு; இலங்கை அதிரடி!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jul 2019, 10:28 am
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின் போது, இலங்கையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.
Samayam Tamil Fernando


இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இதுபோன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்துள்ளது. ஆனால் அந்நாட்டு அரசு பொருட்படுத்தவில்லை.

இதன் விளைவாக வரலாற்றில் மிக மோசமான குண்டுவெடிப்பால் இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதாக அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பெர்னாண்டோ, காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. களத்தில் சிபிஐ அதிகாரிகளும் இறங்கினர். இதற்காக மூவர் குழு அமைத்து, அதிபர் சிறிசேனா விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.

இவர்கள் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெர்னாண்டோவை விசாரணைக்கு அழைத்தனர். அவர் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி, தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் பெர்னாண்டோ, புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி