ஆப்நகரம்

எல்லாம் அடுத்த வருஷம் பாத்துக்கலாம்...நாடாளுமன்ற கூட்டத்தொரை ஒத்திவைத்த கோத்தபய ராஜபக்ச !!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Dec 2019, 8:31 pm
நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil rsp


இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச, அந்த நாட்டின் எட்டாவது அதிபராக கடந்த மாதம் 18ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடன் 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டார்.

அதே சமயம், இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங் அண்மையில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, "நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும், மக்கள் நலனுக்கான அரசாக இது இருக்கும்" எனவும் கோத்தபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

கோத்தபய ராஜபக்ச சீனாவுக்கு வைத்துள்ள "ஆப்பு" !

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவிப்புக்கு மாறாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக, அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு அதிரடியாக அறிவித்திருந்தார்.

"இலங்கை அரசியலமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. இன்று தொடங்குவதாக இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும்.

அக்கூட்டத்தொடரில், புதிய அரசின் கொள்கைகள் குறித்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச சிறப்புரையாற்றுவார்" என அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அதிபராக பொறுப்பேற்றதும், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்ச, மூன்று நாட்கள் அரச முறை பயணமாக அண்மையில் இந்தியா வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி