ஆப்நகரம்

இலங்கையில் விரைவில் மாற்றப்படவுள்ள முப்படைகள்

இலங்கையின் முப்படைத் தளபதிகளை 24 மணி நேரத்தில் மாற்றப் போவதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். பாதுகாப்பில் கோட்டை விட்ட முப்படைத் தளபதிகளை 24 மணி நேரத்திற்குள் மாற்றப் போவதாகவும் இலங்கை அதிபர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Apr 2019, 9:11 am
இலங்கையின் முப்படைத் தளபதிகளை 24 மணி நேரத்தில் மாற்றப் போவதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
Samayam Tamil sirisena


ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் நடுவே தேவாயலங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த 8 குண்டுவெடிப்புகள் இலங்கையை மட்டுமின்றி உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன.

இலங்கையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதற்கான உளவுத்துறை எச்சரிக்கைகள் பத்து நாட்களுக்கு முன்பே வெளியான போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைபாடு காரணமாகத்தான் தீவிரவாதிகளின் கொடிய தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தமக்கு எந்த வித உளவுத்துறை எச்சரிக்கையும் வெளியாகவில்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பில் கோட்டை விட்ட முப்படைத் தளபதிகளை 24 மணி நேரத்திற்குள் மாற்றப் போவதாகவும் இலங்கை அதிபர் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி