ஆப்நகரம்

அழகுக் கலை உலகக் கோப்பை போட்டியில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை.!

சர்வதேச அழகுக் கலை போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இலங்கை தமிழ் பெண்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த சாதனையில் கொழும்பாய்ச் சேர்ந்த தமிழ் பெண்ணும் அடங்கியுள்ளார்.

Samayam Tamil 17 Sep 2019, 3:11 pm
பிரான்சில் நேற்று நடைபெற்ற சர்வதேச அழகுக் கலை முக ஒப்பனை போட்டி கடந்த 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Samayam Tamil 00000


இலங்கை சார்பில் கயல்விழி, மயூரி மற்றும் தீக்ஸினி ஆகிய மூன்று போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். இதில் கயல்விழி ஜெயப்பிரகாஷ் என்பவர் கொழும்பைச் சேர்ந்த அலகு கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரும் மாத்தறையைச் சேர்ந்தவர்களாவர்.

பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் முக ஒப்பனை கலை உலகக் கோப்பை போட்டியில் இதன்மூலம் முதலிடத்தைப் பிடித்து இலங்கைக்குப் புகழ் கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறைகளையும் தாண்டி இலங்கைத் தமிழர்கள் கலைத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர்.

தினசரி இணையதளங்களில் பாட்டு, நடனம் மற்றும் இசை எனத் திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் மனதைக் கவர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் தனித்துவமான இந்த போட்டியில் கோப்பையைக் கைப்பற்றிய பெண்களின் சாதனை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி