ஆப்நகரம்

இலங்கையின் உயரிய ராணுவ அதிகாரி திடீர் கைது!

கொழும்பு: உள்நாட்டுப் போரில் கொலை குற்றங்களை மூடி மறைத்த விவகாரத்தில் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 29 Nov 2018, 2:39 pm
இலங்கை அரசிற்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கும் 26 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. இது கடந்த 2009ல் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
Samayam Tamil Srilanka


ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போரின் போது நடைபெற்ற குற்றங்களை சேனல் 4 மற்றும் ஐநா ஆவணப்படுத்தி, உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின.

இந்நிலையில் உள்நாட்டுப் போரின் போது முக்கிய நிலைகளில் 11 இளைஞர்களை கொன்றதாக கடற்படை உளவுத்துறை அதிகாரி மீது சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயத்தை உயரிய ராணுவ அதிகாரியான ரவீந்திர விஜேகுணரத்ன மூடி மறைத்து விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை ரவீந்திர மறுத்து வந்தார். இதற்கிடையில் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய 3 பிடியாணைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு டிசம்பர் 5ஆம் தேதி காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அடுத்த செய்தி