ஆப்நகரம்

நம்ம மக்கள் அவதானமாக இருக்க வேணும்... சவூதிக்கான இலங்கை தூதரகம் அறிக்கை

​மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச்சூழலால் உலகின் பல்வேறு நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன.

Samayam Tamil 9 Jan 2020, 4:59 pm
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்காவின் தாக்குதலால், ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
Samayam Tamil srilanka saudi


ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஈரான் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 80 பேர் பலியானதாக ஈராக் தெரிவித்தது.

ஆனால், கீழே விழுந்தோம் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தொனியில், ராணுவத் தளத்தில் சிறிய சேதமே மற்றபடி எந்த சேதாரமும் இல்லை. ஒரு அமெரிக்கர் கூட பாதிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை வாசலில் வீரவசனம் பேசியிருக்கிறார் ட்ரம்ப்.

இதற்கிடையில், ஈரான் ஈராக் பகுதிகளில் பறப்பதைத் தவிர்க்கக் கோரி இந்திய அரசு, விமானங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

எடப்பாடி பழனிசாமி முதல் டொனால்ட் ட்ரம்ப் வரை... இன்றைய செய்திகளின் தொகுப்பு

இந்நிலையில், இலங்கை மக்கள் அவதானமாக (விழிப்போடு) இருக்க வேண்டும் என்று சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களை சவூதிக்கான இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சவூதிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேரடியாகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சீட்டை எச்சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் இலங்கைத் தூதுவராலயம் ஆலோசனை வழங்குகிறது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச்சூழலால் உலகின் பல்வேறு நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன.

அடுத்த செய்தி