ஆப்நகரம்

சீனாவிற்கு குத்தகை விட்ட துறைமுகத்தில் இலங்கை ராணுவ தளம்; இந்தியாவின் முயற்சி வெற்றி!

இந்திய நெருக்கடியால் இலங்கை அரசு ராணுவ தளத்தை அமைத்துள்ளது.

Samayam Tamil 1 Jul 2018, 3:28 pm
கொழும்பு: இந்திய நெருக்கடியால் இலங்கை அரசு ராணுவ தளத்தை அமைத்துள்ளது.
Samayam Tamil Hambantotaport


கடந்த டிசம்பரில், இலங்கையின் தெற்கு கடல்பகுதியில் அமைந்துள்ள ஹம்மன் தோட்டா துறைமுகத்தில், பொழுதுபோக்கு அம்சங்களை கட்டமைக்க சீன மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு, ரூ.70,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, கடல்பகுதியில் செயற்கையாக தீவு ஒன்றை அமைத்து, அதில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பல்வேறு தவணைகளில் இலங்கைக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இலங்கையின் நடவடிக்கைக்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் இந்தியப் பெருங்கடலில் சீனா, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்று குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து ஹம்பன் தோட்டா துறைமுகத்தில், இலங்கை தனது கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது கடற்படையின் தெற்கு கமாண்டோ பிரிவை நிறுவுகிறது. இது தற்போது காலே துறைமுகத்தில் உள்ளது. மேலும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Srilanka to base navy southern command at Chinese.

அடுத்த செய்தி