ஆப்நகரம்

ஆஸி., நியூசி.,க்கு வாழ்விடம் தேடி பயணம்; ஏராளமான இலங்கை அகதிகள் அதிரடி கைது!

வாழ்விடம் தேடி வெளிநாடுகளுக்கு பயணிக்க முயற்சித்த அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 8 Dec 2017, 3:13 pm
புத்தளம்: வாழ்விடம் தேடி வெளிநாடுகளுக்கு பயணிக்க முயற்சித்த அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil srilankan refugees arrested when try to escape
ஆஸி., நியூசி.,க்கு வாழ்விடம் தேடி பயணம்; ஏராளமான இலங்கை அகதிகள் அதிரடி கைது!


இலங்கையில் போர் முடிவுற்று எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி செல்லும் அகதிகளின் பயணங்கள் முற்றுப்பெறவில்லை.

இந்த வகையில் கடந்த சில தினங்களில் படகு வழியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல முயற்சித்த 30க்கும் மேற்பட்டோர், இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒகி புயல் காரணமாக நிலவிய மோசமான வானிலையால் இவர்கள் கரை ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடுத்தபடியாக இலங்கையிலிருந்து வெளியேறிய அகதிகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகு வழியாக செல்ல ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Srilankan refugees arrested when try to escape.

அடுத்த செய்தி