ஆப்நகரம்

கிறிஸ்துமஸ் தீவிலிருந்து சட்டவிரோத படகு பயணம்; தடுத்து நிறுத்தி இலங்கை அகதிகள் நாடு கடத்தல்!

படகு வழியாக செல்ல முயன்ற 20 அகதிகளை, ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நாடு கடத்தப்பட்டனர்.

Samayam Tamil 31 May 2019, 6:26 pm
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து, கடந்த மே 29ஆம் தேதி 20 அகதிகள் தனி விமானம் மூலம் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டது.
Samayam Tamil Refugees


இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கோர்மாக், ”அகதிகளின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது” என்றார். முன்னதாக ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தியப் பெருங்கடலில் படகு ஒன்று ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதைக் கண்ட கடலோர காவல்படை, படகை தடுத்து நிறுத்தி அனைவரையும் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைத்தனர். இந்த சம்பவம் மேலும் பேசிய மெக்கோர்மாக், ”மே மாதத் தொடக்கத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தப் படகு கிளம்பியுள்ளது.

அதில் வந்த அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்” என்றார். கடந்த 2013 செப்டம்பர் முதல் இலங்கையில் இருந்து வந்த 186 பேர் ஆஸ்திரேலிய எல்லைப் படையால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னதாக தென் இலங்கையில் இருந்து மீன்பிடி படகில் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிக்க முயன்ற 41 பேரை, இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தியது. கடந்த மே 12ஆம் தேதி, மட்டக்களப்பு பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 15க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அடுத்த செய்தி