உலகெங்கும் உள்ள அகதிகளில் 10, 000 பேருக்கு வேலை வழங்கும் முடிவை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியுரிமை கட்டுப்பாட்டு உத்தரவுக்குப் பதில் நடவடிக்கையாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதன் நிறுவனத்தலைவர் ஹோவார்ட் சுஹுல்ஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஹோவார்ட், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலில் அனைவரும் வாழ்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் அனைவரும் உழைப்பால் உயர முடியும் என்ற கனவு கேள்விக்குறியாக்கப்படுவதை நாம் இப்போது காண்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப், அகதிகருக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவையடுத்து, பாதிக்கப்பட்ட தமது ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட ஹோவார்ட், அகதிகளுக்கு பணிவழங்கும் முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் அகதிகளுக்கு நாடு முழுவதிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியுரிமை கட்டுப்பாட்டு உத்தரவுக்குப் பதில் நடவடிக்கையாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதன் நிறுவனத்தலைவர் ஹோவார்ட் சுஹுல்ஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஹோவார்ட், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலில் அனைவரும் வாழ்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் அனைவரும் உழைப்பால் உயர முடியும் என்ற கனவு கேள்விக்குறியாக்கப்படுவதை நாம் இப்போது காண்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப், அகதிகருக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவையடுத்து, பாதிக்கப்பட்ட தமது ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட ஹோவார்ட், அகதிகளுக்கு பணிவழங்கும் முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் அகதிகளுக்கு நாடு முழுவதிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.