ஆப்நகரம்

படுக்கையில் உச்சா இருந்த சிறுவனின் கண்னை தோண்டி எடுத்த வளர்ப்புத்தாய்!

படுக்கையில் சிறுநீர் கழித்த 4 வயது சிறுவனின் கண்னை வளர்ப்புத்தாய் தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 18 Mar 2017, 4:04 pm
படுக்கையில் சிறுநீர் கழித்த 4 வயது சிறுவனின் கண்னை வளர்ப்புத்தாய் தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil stepmother gouges out the eyes of her four year old stepson
படுக்கையில் உச்சா இருந்த சிறுவனின் கண்னை தோண்டி எடுத்த வளர்ப்புத்தாய்!


பொதுவாக குழந்தைகள் கிட்டத்தட்ட 5 வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்கம் தான். ஆனால் மத்திய ஜிம்பாப்வேவின் மாஸ்விகினோவில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் இந்த செயலை செய்த காரணத்துக்காக அவரது வளர்ப்புத்தாய், அவனின் கண்னை தோண்டி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்த போலீசார் விசாரணையில் அவர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், அந்த சம்பவத்துக்கான காரணத்தை வளர்ப்புத்தாய் தெரிவித்த விதம் மேலும் எரிச்சலடைய செய்துள்ளது. அவன் எனது மகன் கிடையாது. அதனால் என்னால் இது போன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். தவிர, இந்த கொடூரமான சம்பவத்தை செய்துவிட்டு, மகிழ்ச்சியாக அந்த பெண் மகிழ்ச்சியில் சிரித்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

An evil stepmother allegedly gouged out the eyes of her four-year-old stepson as a barbaric punishment after he wet the bed.

அடுத்த செய்தி