ஆப்நகரம்

விமானத்தை கடத்திச் சென்று விபத்தக்குள்ளாக்கிய ஊழியர்!

அமெரிக்காவில் விமான நிலைய ஊழியர் ஒருவர், அனுமதியின்றி விமானத்தை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2018, 12:36 pm
அமெரிக்காவில் விமான நிலைய ஊழியர் ஒருவர், அனுமதியின்றி விமானத்தை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil aircraft theft


அமெரிக்காவின் சியாட்டில்-டகோமா விமான நிலையத்தில், மெக்கானிக்காக பணிபுரியும் ஒருவர், நேற்று இரவு அலாஸ்கா ஏர்லைன்ஸில், பயணிகள் இல்லாத விமானத்தை ஒன்றை அனுமதியின்றி எடுத்துச் சென்றார். விமானம் காணமால் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர்கள், யார் விமானத்தை எடுத்துச் சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே வாஷிங்டன் சியாட்டில் உள்ள காட்டுப்பகுதியில், விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நொறுங்கி கிடப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அது அனுமதியின்றி மெக்கானிக் எடுத்துச் சென்ற விமானம் என்பது தெரியவந்தது.

மேலும், விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் ஏற்பட்ட தீ, காட்டுப்பகுதியில் பரவி வரும் நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. விமானத்தை ஓட்டிச் சென்ற மெக்கானிக் இறந்து விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு விமானம் சரிவர ஓட்டத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி