ஆப்நகரம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சரான்கானி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் இன்று 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

TOI Contributor 29 Apr 2017, 11:46 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் சரான்கானி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் இன்று 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Samayam Tamil strong quake off philippines damages buildings officials
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரிய வரவில்லை. மிண்டானோ பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில், பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வகம் சுனாமி எச்சரிக்கை விடவில்லை.

நிலநடுக்கம் குறித்து ஒருவர் கூறுகையில், ''நிலநடுக்கத்தை எங்களால் நன்றாக உணர முடிந்தது. சுமார் 10 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது'' என்றார். பசிபிக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்து இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாக உள்ளது.

Strong quake off Philippines damages buildings: Officials

அடுத்த செய்தி