ஆப்நகரம்

மூளையை தின்னும் கொரோனா: பீதியை கிளப்பும் புதிய தகவல்!

கொரோனா தாக்கத்தின் விளைவாக மூளையில் சேதம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 7 Jan 2021, 7:48 pm
கொரோனா வைரஸ் பாதித்தால் வாழ்வா சாவா என்ற இரண்டே நிலை மற்றுமே நீடித்து வருகிறது. ஆனால், கொரோனா பாதித்தவர்களுக்கு மூளை படிப்படியாக சேதமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil study finds new evidence of coronavirus damaging brain blood vessels
மூளையை தின்னும் கொரோனா: பீதியை கிளப்பும் புதிய தகவல்!


​கொரோனாவின் முதல் அத்தியாயம்

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது முதல் இப்போது வரை தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. எனினும், பல நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

​கொரோனா அறிகுறிகள்

பொதுவாக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, தசை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை கொரோனாவுக்கு அறிகுறிகளாக சுட்டப்படுகின்றன. இதுபோக வயிற்று வலி, தலைவலி, வயிற்றுப் போக்கு ஆகியவையும் பரவலாக இல்லாத அறிகுறிகள் என கூறப்படுகின்றன.

​மூளையை தின்னும் கொரோனா

கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்தாலும், அவரது மூளையில் தொற்று ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இது உண்மைதான் என்றாலும், கொரோனா தொற்றை உடல் எதிர்கொள்வதன் விளைவாக மூளை படிப்படியாக சேதமடைவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

​அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் அல்லது கொரோனா தொற்றுடன் உயிரழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை வைத்து பார்க்கும்போது, கொரோனாவை உடல் எதிர்கொள்ளும்போது மூளையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக மூளையை கொரோனா தாக்குவதாக தெரியவந்துள்ளது.

​கொரோனாவின் இரண்டாம் அத்தியாயம்

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இங்கிலாந்தில் கிளம்பிய புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பரவி நோய் தொற்றை கட்டுப்பாடில்லாமல் உயர்த்திவிட்டது. இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் புதிய கொரோனா பரவத் தொடங்கிவிட்டது.

அடுத்த செய்தி