ஆப்நகரம்

கண்டம் விட்டு கண்டம் தாவும் பாக்டீரியா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பாக்டீரியாக்கள் கண்டம் விட்டு கண்டம் பயணிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 15 Dec 2020, 5:12 pm

சில பாக்டீரியாக்களால் கண்டம் விட்டு கண்டம் பயணிக்க முடியும் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வளிமண்டல துகள்களில் மறைந்திருந்து ஒரு கண்டத்தில் இருந்து வேறு கண்டத்துக்கு பாக்டீரியாக்களால் பயணிக்க முடியுமென கிரனாடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil Representational image


இந்த ஆய்வறிக்கை Atmospheric Research என்ற இதழில் வெளியாகியுள்ளது. இதில், iberulites என அழைக்கப்படும் வளிமண்டள துகல்கள் வாயிலாக நுண்ணுயிரிகள் மற்ற கண்டங்களுக்கு நகர்ந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

முன்பை விட சக்திவாய்ந்த கொரோனா அவதாரம்: மீண்டும் ஊரடங்கு அமல்!

இந்த வளிமண்டல துகள்கள் பாக்டீரியாக்கள் பயணம் செய்வதற்கு ஒரு ராக்கெட் போல பயன்படுவதாகவும், ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு நோய்கள் பரவ வழிவகுக்கும் எனவும் இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், பாக்டீரியாக்கள் பயணிக்கும் வளிமண்டலத் துகள்களை மனிதர்கள் மூச்சு வழியாக சுவாசிக்க முடியும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த iberulites துகள்கள் பல்வேறு மினரல்களால் உருவாகியுள்ளன. இதன் சராசரி அளவு 100 மைக்ரான்கள்.

விஜே சித்ராவுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போச்சே

இந்த வளிமண்டல துகள்கள் 2008ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இத்துகள்கள் உருவாவதில் பாக்டீரியாக்களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வளிமண்டல துகள்கள் பூமி முழுவதும் பரவி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி