ஆப்நகரம்

அதிபரை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் : 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான் அதிபர் பங்கேற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் பலியாகினர்.

Samayam Tamil 17 Sep 2019, 11:39 pm
ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு அருகே திடீரென தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
Samayam Tamil sba


இதில் 24 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ரத்தானதன் விளைவாக, தலிபான்கள் அங்கு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அருகேயும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், இத்தாக்குதலால் உயிர்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை.

அடுத்த செய்தி