ஆப்நகரம்

பாக்தாத் நகரில் தற்கொலை தாக்குதல்: 20 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாதில், நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், 20 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

TNN 9 Jun 2017, 9:23 pm
ஈராக் தலைநகர் பாக்தாதில், நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், 20 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
Samayam Tamil suicide bomber kills 20 in market south of baghdad
பாக்தாத் நகரில் தற்கொலை தாக்குதல்: 20 பேர் பலி


பாக்தாத் நகரின் தெற்கே உள்ள முஸாயிப் என்ற பகுதியில் உள்ள மார்க்கெட்டில் இந்த தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் அங்கு வந்த தீவிரவாதி ஒருவன், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.

இதில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதி ஷியா பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். அவர்களை குறிவைத்து, ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

A suicide bomber on Friday blew himself up in a market in the town of Musayyib, south of Baghdad, Iraq, killing at least 20 people.

அடுத்த செய்தி