ஆப்நகரம்

சோமாலியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ அதிகாரிகள் பலி

சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில், ராணுவ கமாண்டோ உட்பட 3 ராணுவ உயர்அதிகாரிகள் பலியாயினர்.

Samayam Tamil 28 Apr 2018, 10:54 pm
சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில், ராணுவ கமாண்டோ உட்பட 3 ராணுவ உயர்அதிகாரிகள் பலியாயினர்.
Samayam Tamil terror attack


சோமாலியா நாட்டில் அல் ஷபாப் என்ற பயங்கரவாதிகளின் இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்கள் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள். இந்நிலையில், சோமாலியா நாட்டின் வட மத்திய பகுதியில் உள்ள கல்காயோ நகரில் இருக்கும் ராணுவ முகாம் மீது, தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் ராணுவ கமாண்டர் உட்பட 3 ராணுவ உயரதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், காயமடைந்த மற்ற வீரரகள் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி