ஆப்நகரம்

நெஞ்சு வலி என சென்றவரின் நுரையீரலில் கரப்பான்பூச்சி : காமெடி கதை

நெஞ்சு வலி என பரிசோதனை செய்ய சென்ற கிறிஸ்துவ மத போதகருக்கு, நுரையீரலில் கரப்பான்பூச்சி உள்ளது என பரிசோதனையில் தெரிந்ததால் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

TNN 23 Apr 2017, 3:03 pm
நெஞ்சு வலி என பரிசோதனை செய்ய சென்ற கிறிஸ்துவ மத போதகருக்கு, நுரையீரலில் கரப்பான்பூச்சி உள்ளது என பரிசோதனையில் தெரிந்ததால் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
Samayam Tamil surgery to remove a live cockroach from the ailing pastors chest turns out as a nigligence act
நெஞ்சு வலி என சென்றவரின் நுரையீரலில் கரப்பான்பூச்சி : காமெடி கதை


ஜிம்பாப்வே நாட்டின், ஹராரே நகரில் ஒரு தேவாலயத்தில் பணியாற்றும் ஒரு மதபோதகர் நெஞ்சுவலி என அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவரோ, எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் என்ன பிரச்னை என பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

சரி என எக்ஸ்ரே எடுத்த போது தான் அந்த நபருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலியை விட, மிக அதிகவலி ஏற்பட்டது. எக்ஸ்ரே அறிக்கையின் படி அவரின் நுரையீரலில் உயிருள்ள ஒரு பெரிய கரப்பான் பூச்சி இருப்பதாக தெரிவித்தனர். இந்த அறிக்கையை பார்த்த மருத்துவர், கரப்பான்பூச்சியை வெளியெடுப்பது பெரிய மருத்துவ சிகிச்சை. இந்த சிகிச்சைக்கு சிறந்த இடம் இந்தியா தான் என ஆலோசனை கூறினார்.

இதையடுத்து அந்த நபர், தன் வீடு, சொத்துக்களை விற்று விட்டு, அதோடு உறவினர்கள் பலர் பணம் கொடுத்து உதவி இந்தியாவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.



மாயமான கரப்பான்பூச்சி:
இந்தியாவில் ஒரு ஸ்கேன் செண்டரில் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, கரப்பான்பூச்சி இல்லை என்பது தெரிந்தது. அதன் பின் ஜிம்பாப்வேயில் எடுத்த எக்ஸ்ரே உற்று பார்த்தப்போது தான் தெரிந்தது. கரப்பான்பூச்சி நுரையீரலில் இல்லை, அது எக்ஸ்ரே எடுக்கும் கருவியின் மேல் அமர்ந்திருந்தது தெளிவாக தெரிந்தது.

இந்த அறிக்கையை பார்த்த மதபோதகருக்கே, எக்ஸ்ரே எடுத்தவரை மன்னிக்கும் என்னமில்லாமல் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது.

அடுத்த செய்தி