ஆப்நகரம்

மான்செஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியின் உறவினர்கள் கைது

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் உறவினர்கள் லிபியாவில் கைதாகியுள்ளனர்.

TNN 25 May 2017, 9:23 am
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் உறவினர்கள் லிபியாவில் கைதாகியுள்ளனர்.
Samayam Tamil suspected manchester bombers father brother arrested in libya
மான்செஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியின் உறவினர்கள் கைது


கடந்த மே 22ஆம் தேதி இரவு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நகரில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சியின்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரே மனித வெடிகுண்டாக மாறி இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக விசாரணையில் தெரிந்துள்ளது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இங்கிலாந்தில் நிகழ்ந்த பெரும் தீவிரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் இத்தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி சல்மான் அபேதியின் சகோதரன் ஹசீம் அபேதி மற்றும் தந்தை ரமதான் அபேதி ஆகியோர் லிபியாவின் திரிபோலி நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தீவிரவாதத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சல்மான் அபேதி லண்டனைச் சேர்த்த லிபிய தம்பதிக்கு பிறந்தவன் என்றும் சகோதரன் ஹசீம் அபேதியுடன் இணைந்து ஐ.எஸ். அமைப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இருவரும் இணைந்து லிபியாவிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டிருந்ததும் தெரிந்துள்ளது.

அடுத்த செய்தி