ஆப்நகரம்

ஹெச்1பி விசா சஸ்பென்ஸை உடைக்காத அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா தொடர்பாக அறிவித்த புதிய சட்டத்தின் வரைவைத் தாக்கல் செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.

Samayam Tamil 3 Jul 2018, 5:21 pm
அமெரிக்க அரசு ஹெச்1பி விசா தொடர்பாக அறிவித்த புதிய சட்டத்தின் வரைவைத் தாக்கல் செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.
Samayam Tamil 64835634


ட்ரம்ப் அறிவிப்பும் தயக்கமும்

அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எச்1பி விசா பெற்று வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவியும் அந்நாட்டில் தங்கி பணியாற்ற அப்போதைய அதிபர் ஒபாமா அனுமதி வழங்கினார். இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.

டொனால்ட் டரம்ப், அமெரிக்கர்களுக்கு பணியில் முன்னுரிமை கிடைக்கும் விதமாக இந்த உத்தரவை வாபஸ் பெற முடிவு செய்தார். இதற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கடந்த ஜனவரி மாதம் செய்தி வெளியானது. தொடர்பான சட்ட வரைவு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பதாக அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்தது.

மாற்றம் இருக்காது

இதனிடையே டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா ஆகிய நாடுகளின் ‘மாணவர்களுக்கான விசா வழங்கும் நாள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அரசின் உயர் அதிகாரி மேரிகே கார்ல்சன், ஹெச்1பி விசாவில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் ஹெச் 4 விசாவில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னர் அறிவித்தபடி ஜூன் மாதம் வரையான காலம் கடந்தும் இன்னும் ஹெச்1பி விசா பற்றிய எந்த அறிவிப்பும் வரவில்லை. இது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, இது எந்த புதிய தகவலும் இல்லை சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார்.

பாதிப்பு யாருக்கு?

ட்ரம்ப் அறிவித்தபடி இச்சட்டம் இயற்றப்பட்டால் எச்1பி விசா பெற்றிருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி வேலையை இழக்க நேரிடும். இதனால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக, கணவன் அல்லது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏராளமான இந்தியர்கள் இதனால் வேலை இழக்க வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில் தொழில்திறன் மிக்க ஏராளமான வெளிநாட்டவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற நிர்பந்திக்கும் இச்சட்டத்திற்கு எதிராகவும் அந்நாட்டில் ஒரு தரப்பினர் குரல்கொடுக்கின்றனர். இதனால் அந்நாட்டு அரசு இந்த விஷயத்தில் தயக்கம் காட்டிவருகிறது.

அடுத்த செய்தி