ஆப்நகரம்

அசாஞ்சே மீதான கைது வாரண்ட்; ஸ்வீடன் நீதிமன்றம் உறுதி செய்தது!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்ட் உத்தரவை உறுதி செய்து, ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 16 Sep 2016, 5:31 pm
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்ட் உத்தரவை உறுதி செய்து, ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil swedish court upholds arrest warrant for julian assange
அசாஞ்சே மீதான கைது வாரண்ட்; ஸ்வீடன் நீதிமன்றம் உறுதி செய்தது!


கடந்த 2010ம் ஆண்டில் அசாஞ்சே மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்மீதான வழக்கை விசாரித்த ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம், அவரை கைது செய்ய உத்தரவிட்டது. எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாஞ்சே, உடனடியாக, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் அரசியல் தஞ்சம்புகுந்தார்.

எனினும், அவரை கைது செய்யும் முயற்சிகளை கைவிடாமல், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டு போலீசார் தொடர்ந்துவருகின்றனர். இந்நிலையில், தன்மீதான கைது வாரண்ட்டை ரத்து செய்யும்படி, ஜூலியன் அசாஞ்சே தரப்பில், ஸ்வீடன் நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை நிராகரித்துள்ள ஸ்வீடன் நீதிமன்றம், அசாஞ்சே குற்றத்தை நிரூபிக்க இதுவரை முன்வரவில்லை என்பதால், அவர் தவறு செய்தது ஏறக்குறைய உறுதி செய்யப்படுவதாகக் கூறியுள்ளது. குற்றம் செய்யவில்லை என்றால், வழக்கு விசாரணையில் ஆஜராகி, சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அசாஞ்சே இதுவரை அப்படி ஏதும் செய்யாததால், அவர் மீதான கைது உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் ஸ்வீடன் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி