ஆப்நகரம்

கறுப்புப் பண விவகாரத்தில் 3 இந்தியர்கள் பெயரை வெளியிட சுவிஸ் வங்கி ஒப்புதல்

சுவிட்சேர்லேந்து நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயரை வெளியிட சுவிஸ் வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Dec 2018, 10:06 am
சுவிட்சர்லேந்து நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் 3 இந்தியர்கள் மற்றும் 2 இந்திய நிறுவனங்களின் கணக்கு விவரங்களை வெளியிட சுவிஸ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
Samayam Tamil swiss-bank
மூன்று இந்தியர்களை பெயரை வெளியிட சுவிஸ் வங்கி இந்தியாவிடம் ஒப்புதல்


இந்திய அரசுக்கு வரிக்கட்டாமல், அதற்குரிய பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய நாட்டு நிறுவனங்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசு பல முறை சுவிஸ் வங்கிக்கு கோரிக்கை விடுத்தது.

தற்போது இதை ஏற்று, 3 இந்தியர்கள் மற்றும் இரண்டு இந்திய நிறுவனங்களின் கணக்கு விவரங்களை வெளியிட அந்த வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதன்படி, சுவிஸ் வங்கி அளிக்க காத்திருக்கும் நபர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், ஒரு நிறுவனம் தமிழக அரசியல் சார்ந்த தொடர்புகளை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து செபி அளித்து வந்த புகாரின் அடிப்படையிலும், இந்திய அரசு முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, இந்தியாவின் ஜியோதேசிக் லிமிடெட் மற்றும் ஆதி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் விவரங்களை சுவிஸ் வங்கி வெளியிடுகிறது.

இதுபோக மூன்று இந்தியர்களான பங்கஜ்குமார் ஓன்கர் ஸ்ரீவத்ஸா, பிரஷாந்த் ஷராத் முலேகர் மற்றும் கிரண் குல்கர்னி ஆகிய மூவரின் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களையும் விரைவில் வெளியிடப்படும் என சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி