ஆப்நகரம்

அகதிகளை உள்ள விடுங்கப்பா; சிட்னியில் நில அதிர்வே வரமாறி பிரம்மாண்ட பேரணி!

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை, ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்கக் கோரி நடைப்பெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

TNN 16 Oct 2017, 12:49 am
சிட்னி: ஆஸ்திரேலியா தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை, ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்கக் கோரி நடைப்பெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil sydney take a grand rally for refugees
அகதிகளை உள்ள விடுங்கப்பா; சிட்னியில் நில அதிர்வே வரமாறி பிரம்மாண்ட பேரணி!


மனுஸ்தீவில் உள்ள தடுப்பு முகாம் வரும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தீவில் அகதிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அம்முகாமை இடிக்கும் பணி நடைபெறுவதாகவும் ஏற்கனவே அங்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசு அகதிகளை நடத்தும் விதம் எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லையோர கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, கடல் வழியாக வந்த அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் என்கிறது. இதன் காரணமாக சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுரு தீவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இம்முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த நவம்பர் 2016 யில் கையெழுத்தான ஒப்பந்தம் பலகட்ட சறுக்கல்களுக்கு பின் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன் 54 அகதிகளின் விண்ணப்பம் அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் பல அகதிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நிராகரிக்கபப்ட்ட அகதிகள் அத்தீவு பகுதிகளிலேயே குடியமர்த்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Sydney take a grand rally for refugees.

அடுத்த செய்தி