ஆப்நகரம்

சிரியாவில் தற்கொலை குண்டுவெடிப்பு; 32 பேர் பலி

சிரியா – துருக்கி எல்லையில், சிரிய அரசு எதிர்ப்புப் போராளிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மனித வெடிகுண்டு வெடித்ததில், 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

TNN 15 Aug 2016, 5:26 pm
சிரியா – துருக்கி எல்லையில், சிரிய அரசு எதிர்ப்புப் போராளிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மனித வெடிகுண்டு வெடித்ததில், 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
Samayam Tamil syria monitors say more than 30 died in suicide attack on bus
சிரியாவில் தற்கொலை குண்டுவெடிப்பு; 32 பேர் பலி


துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இத்லிப் என்ற மாகாணத்தை மையமாகக் கொண்டு, சிரிய அரசுக்கு எதிரான போரை கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு, துருக்கி அரசு தரப்பில் மறைமுக ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்குள்ள அத்மே என்ற இடத்தில் இருந்து இன்று காலை சிரிய எதிர்ப்புப் படையை சேர்ந்த வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்தில் திடீரென மனித வெடிகுண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில், பேருந்தில் இருந்த சிரிய எதிர்ப்புப் படையினர் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த அத்மே சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த துருக்கி எல்லைக் காவல் வீரர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்கும் விதமாக, சிரியா, ரஷ்யா மற்றும் நேட்டோ படையினர் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனர். அங்கு நடைபெற்றுவரும் சண்டையில் பங்கேற்பதற்காக, இத்லிப் மாகாணத்தில் இருந்து, கிளர்ச்சியாளர்கள் புறப்பட்டுச் சென்றதாகவும், அவர்கள் மீது ஐஎஸ் அல்லது அல் கொய்தாவின் நுஸ்ரா முன்னணி அமைப்பினர் பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி