தைவான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தளபதி உட்பட 8 பேர் பலி
அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
Samayam Tamil 3 Jan 2020, 2:12 pm
ஹைலைட்ஸ்:
- ராணுவத் தளபதி ஜெனரல் ஷென் யிமிங் மற்றும் மூன்று மேஜர் ஜெனரல்கள் மரணம்.
- தளபதியின் மரணத்தை முன்னிட்டு தைவானில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
தைவானில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவத் தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். தைவான் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வியாழக்கிழமை தைபேயில் உள்ள சோங்ஷான் விமானப்படை தளத்திலிருந்து, யிலன் கவுண்டியில் உள்ள டோங்காவ் ராணுவ தளத்திற்கு புறப்பட்டது.
60 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் டி.எஸ். எலியட்டின் கடிதங்கள்
இதில் அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் சென்றனர். ராணுவ தளபதி ஜெனரல் ஷென் யி மிங், 3 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
தைபே மலைப்பகுதிக்கு அருகே சென்றகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமான அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்துள்ளார். அதற்குள் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஈரானின் முக்கியத் தலைவரை, ஈராக்கில் கொலை செய்த அமெரிக்கா!
இதனை அறிந்து ராணுவ மீட்பு குழு விபத்து நேர்ந்த இடத்துக்கு விரைந்து சென்றது. ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ராணுவத் தளபதி ஜெனரல் ஷென் யிமிங் மற்றும் மூன்று மேஜர் ஜெனரல்கள் உட்பட 8 பேர் மரணம் அடைந்தனர்.
அவர்களது உடல்கள் தைபே நகருக்கு கொண்டுவரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. ராணுவத் தளபதியின் மரணத்தை முன்னிட்டு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிசாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி உயிரியல் பூங்காவில் தீ விபத்து: 30 விலங்குகள் சாவு
60 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் டி.எஸ். எலியட்டின் கடிதங்கள்
இதில் அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் சென்றனர். ராணுவ தளபதி ஜெனரல் ஷென் யி மிங், 3 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
தைபே மலைப்பகுதிக்கு அருகே சென்றகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமான அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்துள்ளார். அதற்குள் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஈரானின் முக்கியத் தலைவரை, ஈராக்கில் கொலை செய்த அமெரிக்கா!
இதனை அறிந்து ராணுவ மீட்பு குழு விபத்து நேர்ந்த இடத்துக்கு விரைந்து சென்றது. ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ராணுவத் தளபதி ஜெனரல் ஷென் யிமிங் மற்றும் மூன்று மேஜர் ஜெனரல்கள் உட்பட 8 பேர் மரணம் அடைந்தனர்.
அவர்களது உடல்கள் தைபே நகருக்கு கொண்டுவரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. ராணுவத் தளபதியின் மரணத்தை முன்னிட்டு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிசாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி உயிரியல் பூங்காவில் தீ விபத்து: 30 விலங்குகள் சாவு