ஆப்நகரம்

SHOCKING: 3 பேரை தூக்கில் தொங்கவிட்டு தலிபான்கள் அட்டூழியம்!

3 பேரின் உடல்களை கிரேன் மூலம் தலிபான்கள் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 12 Oct 2021, 5:31 pm
ஆப்கானிஸ்தான் நாட்டில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கொலை செய்து, அவர்களது உடல்களை பொது வெளியில் பட்டப் பகலில் கிரேன் மூலம் தலிபான்கள் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil taliban hanged bodies of dead criminals in herat
SHOCKING: 3 பேரை தூக்கில் தொங்கவிட்டு தலிபான்கள் அட்டூழியம்!




​ஆப்கனில் தலிபான் ஆட்சி

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தலிபான் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், தலிபான் அரசு இன்னனும் பதவி ஏற்காமல் உள்ளது.

​நடந்தது என்ன?

ஹெராட் மாகாணத்தில் உள்ள ஒபே மாவட்டத்தில், அண்மையில் மூன்று பேர் கொண்ட கும்பல், ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கச் சென்றது. அப்போது கொள்ளையர்கள் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து மூன்று கொள்ளையர்களையும் தலிபான்கள் பிடித்துச் சென்று விட்டனர்.

3 பேருக்கு தூக்கு

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் கொலை செய்த தலிபான் அமைப்பினர், ஹெராட் மாகாணத்தின் முக்கிய இடத்தில், பட்டப் பகலில், பொது வெளியில் கிரேன் இயந்திரம் மூலம் அவர்களது உடல்களை தூக்கில் தொங்கவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

​தப்பு செஞ்சா கை, கால்கள் கட்

ஆப்கானிஸ்தானில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் கை, கால்கள் துண்டிக்கப்படும் என, தலிபான்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தனர்.

BREAKING: வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

எங்களுடைய சட்டங்களை பின்பற்றுகிறோம்; நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்; யாரும் எங்களுக்கு எதையும் கற்றுத் தர வேண்டாம் என, தலிபான் மூத்த அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

​தொடரும் தலிபான்கள் அட்டகாசம்

தலைநகர் காபூலில் சிறிய அளவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள், சமீபத்தில், பொது வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கைவிலங்கு பூட்டி, முகத்தில் கரி பூசி, வாயில் கெட்டுப்போன பழைய ரொட்டி துண்டை திணித்து அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், கடந்த வாரம் செய்தி வெளியாகி இருந்தது. இதே போல், சில நாட்களுக்கு முன்பு, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை பட்டப் பகலில் தலிபான்கள் தூக்கில் தொங்கவிட்டது குறிப்பிடத்தக்கது,

மக்கள் அச்சம்

தலிபான்களின் இது போன்ற செயல்களால், ஆப்கன் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தலிபான்கள் நடந்து கொள்ளும் விதம் பொது மக்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தலிபான் நடத்திய ஆட்சி மீண்டும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி