ஆப்கானிஸ்தானில், தனித்தனி பேருந்துகளில் சென்ற பயணிகளை வழிமறித்த தலிபான்கள், 16 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் பலரை கடத்திச் சென்றுள்ளனர்.
அந்நாட்டின் வடக்கு மாகாணமான குண்டுஸில் உள்ள அலியாபாத் பகுதியில் இருந்து, தலைநகர் காபுல் நோக்கி, 4 பேருந்துகளில், 200க்கும் அதிகமானோர் சென்றுகொண்டிருந்தனர். இந்த 4 பேருந்துகளையும், திடீரென தலிபான் தீவிரவாதிகள் வழிமறித்தனர். அனைவரையும் கீழே இறக்கிய தலிபான்கள், 16 பயணிகளை சுட்டுக்கொன்றனர். மேலும், 100க்கும் அதிகமானோரை சிறைபிடித்துச் சென்றனர்.
அவர்களை மறைவிடத்தில் வைத்து, தலிபான்கள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் சென்ற பயணிகளில் சிலர் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் என்பதால், அவர்களை மையமாக வைத்து, இந்த பயங்கரவாதச் செயலை தலிபான்கள் செய்திருக்கலாம் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் வடக்கு மாகாணமான குண்டுஸில் உள்ள அலியாபாத் பகுதியில் இருந்து, தலைநகர் காபுல் நோக்கி, 4 பேருந்துகளில், 200க்கும் அதிகமானோர் சென்றுகொண்டிருந்தனர். இந்த 4 பேருந்துகளையும், திடீரென தலிபான் தீவிரவாதிகள் வழிமறித்தனர். அனைவரையும் கீழே இறக்கிய தலிபான்கள், 16 பயணிகளை சுட்டுக்கொன்றனர். மேலும், 100க்கும் அதிகமானோரை சிறைபிடித்துச் சென்றனர்.
அவர்களை மறைவிடத்தில் வைத்து, தலிபான்கள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் சென்ற பயணிகளில் சிலர் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் என்பதால், அவர்களை மையமாக வைத்து, இந்த பயங்கரவாதச் செயலை தலிபான்கள் செய்திருக்கலாம் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.