ஆப்நகரம்

குண்டுவெடிப்பில் தமிழ் மீடியம் டீச்சருக்கு தொடர்பா? இலங்கையில் 106 பேர் அதிரடி கைது!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 106 பேரில் தமிழ் மீடியம் டீச்சர் ஒருவரும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 28 Apr 2019, 5:09 pm
ஈஸ்டர் திருநாளில் இலங்கையின் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil Srilanka


இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இயக்கத்தை இலங்கை அரசு தடை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் 106 பேரைக் கைது செய்து, சிஐடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் 40 வயது மதிக்கத்தக்க தமிழ் மீடியம் டீச்சரும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் இருந்து 50 சிம் கார்டுகள் மற்றும் சந்தேகிக்கும் வகையிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்பிதியா போலீசார் மற்றும் கப்பற்படை இணைந்து நடத்திய ஆபரேஷனில் தமிழ் மீடியம் டீச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் வவுனியா நகரில் ராணுவம் மற்றும் போலீசார் கூட்டாக நடத்திய ஆபரேஷனில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்நகரின் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலேவின் தம்கேதரா பகுதியில், தேசிய தவ்ஹீத் ஜமாத் நடத்தி வரும் பள்ளியில் இருந்து வந்த தகவலின்பேரில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியர். மற்றொருவர் வழிகாட்டுநராக பணியாற்றி வந்த மருத்துவர். கடந்த வெள்ளி அன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த செய்தி