ஆப்நகரம்

Gaja Cyclone: மொய்விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டிய அமெரிக்கவாழ் தமிழர்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக, மொய்விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டிய அமெரிக்கவாழ் தமிழர்கள்!

Samayam Tamil 28 Nov 2018, 2:30 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக, அமெரிக்கவாழ் தமிழர்கள், மொய்விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil Gaja Cyclone: மொய்விருந்து நடத்தி  நிவாரண நிதி திரட்டிய அமெரிக்கவாழ் தமிழர்கள்!
Gaja Cyclone: மொய்விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டிய அமெரிக்கவாழ் தமிழர்கள்!


கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரங்கள், வயல் வெளிகள் என பச்சை பசேலாக காட்சியளித்த இடங்கள் இன்று பாலைவனங்களாக மாறியுள்ளன. லட்சகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவு, உடை, குடிநீர், மின்சார வசதியின்றி நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர். இதேபோல் நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற கடலோர மாவட்டங்களிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கஜா புயல் முற்றிலும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த பலரும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாஷிங்டன் நகரில் இருக்கும் எய்ம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ’டைன் ஃ பார் கஜா’ என்ற பெயரில் மொய் விருந்து ஏற்பாடு செய்தது. இதற்காக சென்னை எக்ஸ்பிரஸ் உணவகம் இலவசமாக உணவு வழங்கியது. வாஷிங்டன் நகரில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், இங்குவந்து உணவருந்தி நன்கொடை வழங்கி சென்றனர்.

இதுகுறித்து, மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், இதுவரை வேதாரண்யம் பகுதியில் இருக்கும் 7 கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 8 கிராமங்களுக்கு உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

ஏற்கெனவே, வாஷிங்டன் தமிழ் சங்கம், எய்ம்ஸ் இந்தியா போன்ற, 60 அமெரிக்க தமிழ் அமைப்புகள், புயல் பாதித்த டெல்டா மாவட்ட கிராமங்களை தத்தெடுக்க ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக மலேசியவாழ் தமிழர்கள் பெருநடை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி