ஆப்நகரம்

150 பேரை பலி கொண்ட தான்சானியா படகு விபத்து; முக்கிய உத்தரவு பிறப்பித்த அதிபர்!

நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட, படகு விபத்தில் அதன் உரிமையாளரை கைது செய்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Sep 2018, 4:49 pm
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் லேக் விக்டோரியா என்ற பிரம்மாண்ட ஏரி உள்ளது. இதன் சுற்றுப்புறங்களாக கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்நிலையில் தான்சானியாவின் உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் தீவுக்கு படகு ஒன்றில் 400க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர்.
Samayam Tamil Tanzania


விக்டோரியா ஏரியில் பயணிக்கையில், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்கு ஆளானது. உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதல்கட்டமாக 100 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ராணுவ நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள், மீனவர்கள், போலீசார், தனியார் படகுகள் உள்ளிட்டவை அடங்கும். தண்ணீரில் மூழ்கிய ஏராளமானோரை மீட்டனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது.

இதையடுத்து படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய, அந்நாட்டு அதிபர் ஜான் முகஃபுலி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதற்கு முன்பு கடந்த 1996ஆம் ஆண்டு, விக்டோரியா ஏரியில் நிகழ்ந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tanzania ferry disaster Captain arrested as death toll rises.

அடுத்த செய்தி