ஆப்நகரம்

அமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..!

ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் எதிரொலியாக அமெரிக்காவில் போராட்டம் நடந்து வரும் நிலையில், நேரலையில் இருந்த பெண் செய்தியாளர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

Samayam Tamil 2 Jun 2020, 9:13 pm
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவரை விசாரணையின்போது போலீசார் கொன்றதால் 5 நாட்களுக்கும் மேலாக அங்கு போராட்டங்களும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. இச்சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
Samayam Tamil அமெரிக்கா கலவரத்தில் கண்ணீர் புகை குண்டு


இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்துக்கு நீதிகேட்டு கறுப்பினத்தவர்கள் வாஷிங்கடனில் உள்ள சியாட்டிலில் போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் எச்சரித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் மூண்டது. அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வெறும் 20 நிமிடங்களில் போராட்டம் நடத்தியவர்களை கலைத்தனர்.


இந்த சம்பவத்தை நேரலையில் தொகுத்து வழங்கிய பெண் செய்தியாளர் ஒருவரும் கண்ணீர் புகையை சமாளிக்க முடியாமல் திணறி ஓடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், '' நண்பர்களே, நான் பேசுவதை உங்களால் கேக்க முடிகிறதா என, அப்பெண் செய்தியாளர் பிரையன் வில்லியம்ஸ் அந்த இடத்தில் இருக்க முடியாமல் ஓடுகிறார்.


கொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி!

இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட நிறுவனம் '' எம்.எஸ்.என்.பி.சியின் நேரடி செய்தி அறிக்கையில் ஒரு பெண் பத்திரிகையாளர் மற்றும் அவரது குழுவினரை ஃபிளாஷ் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் தாக்கப்பட்டனர் '' என குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. போராட்டம் நடக்கும் இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற குழு மீதும் போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவம் அந்நாட்டின் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அடுத்த செய்தி