ஆப்நகரம்

மோட்டலில் துப்பாகியுடன் நுழைந்த நபர்:பிரான்சில் பரபரப்பு

பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 19 Jul 2016, 10:44 pm
பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil terrorist attack in france
மோட்டலில் துப்பாகியுடன் நுழைந்த நபர்:பிரான்சில் பரபரப்பு


ஏற்கனவே இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில்,இந்த சம்பவம் மற்றொரு தீவிரவாத நடவடிக்கையாக இருக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தெற்கு பிரான்சில் உள்ள பொலினி பகுதியில் மெர்சில்லி என்ற நகர்ப்பகுதி உள்ளது.இங்கு செயல்பட்டு வரும் பார்முலா-1 என்ற மோட்டலில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவன் நுழைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்ந்து அந்த மோட்டலை சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஹோட்டலுக்குள் சென்ற மனிதன் ,அங்கு யாரையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளானா? வெடிகுண்டுகள் வைத்துள்ளானா?என பிரான்ஸ் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்னர் பிரான்சின் நீஸ் என்ற இடத்தில், கனரக லாரி ஒன்றில்மூலம் மக்கள் கூட்டத்தில் புகுந்த ஐ.எஸ் பயங்கரவாதி 84 பேரை நசுக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி