ஆப்நகரம்

பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுகிறான் மசூத் அசார்!

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில், பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மசூத் அசார் மீண்டும் பாகிஸ்தானில் பகிரங்கமாக நடமாடத் தொடங்கியிருக்கிறான்.

Samayam Tamil 25 Apr 2019, 8:56 am
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில், பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மசூத் அசார் மீண்டும் பாகிஸ்தானில் பகிரங்கமாக நடமாடத் தொடங்கியிருக்கிறான்.
Samayam Tamil masood azhar


அண்மையில் மசூத் அசார் பாகிஸ்தானின் பாஹவல்புர் பகுதியில் தீவிரவாதிகள் கூட்டிய ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அப்போது தன் ஆதரவாளர்களுடன் பேசிய மசூத் அசார் தாம் இந்தியாவின் துல்லியத் தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதாக வந்த செய்திகளை மறுத்ததுடன், 17 ஆண்டுகளாக மருத்துவமனை பக்கமே போனதில்லை என்றும் தெரிவித்துள்ளான்.

மசூத் அசார் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல் தொடுக்கப் போவதாக மிரட்டியுள்ள மசூத் அசாரைக் கண்காணித்து வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி