ஆப்நகரம்

இர்மா சூறாவளியால் சின்னாபின்னமான கரீபியன் தீவுகள்.!

அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கியுள்ளது.

TNN 7 Sep 2017, 10:14 pm
அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கியுள்ளது.
Samayam Tamil the impact of irma hurricae
இர்மா சூறாவளியால் சின்னாபின்னமான கரீபியன் தீவுகள்.!


ஐந்தாவது தரமாக வகைப்படுத்தப்பட்ட இர்மா சூறாவளி, மணிக்கு சுமார் 300கிலோமீட்டர் வேகத்தில் ஏற்கனவே அன்குலீனா, அண்டிகுவா மற்றும் பார்புடா தீவுகளை தாக்கியுள்ளது. அட்லாண்டிக் பிராந்திய நாடுகள் முழுவதும் இர்மா சூறாவளியால் பயங்கர பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதிலும், கரீபியப் பிராந்தியத்தில் இர்மா சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளதால் அங்கு குடியிருப்புகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

இர்மா சூறாவளியால் மார்டின் மற்றும் பர்புடா ஆகிய தீவுகள் அனைத்தும் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. இதனால் இந்த தீவுகளில் வாழும் 90 சதவீத மக்கள் குடியிருப்புக்களை இழந்துள்ளனர். இதிலும் பர்புடா தீவு முழுவதுமாக அழிக்கப்பட்டு 95 % குப்பை மேடு ஆகிவிட்டதாக அதன் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.

மணிக்கு சுமார் 290கி.மீட்டர் வேகத்தில் வீசிய இர்மா சூறாவளியால் கரீபிய தீவுகளனைத்தும் முற்றிலுமாக சிதிலமடைந்து உள்ளன. மின்சாரநிலையங்கள், நீர்த்தாங்கிகள் முதல் கொண்டு எல்லாமே சேதமடைந்து விட்ட்தால் மக்கள் நிவாரணத்திற்காக காத்திருக்கின்றனர். இன்னும் இர்மா சூறாவளி தனது நிலையை குறைத்து கொள்ளாமல், அதே ஐந்தாம்நிலை தீவரத்துடன் சூழன்றடித்து வருவதால் மேலும் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.

இர்மா சூறாவளியின்வின் தற்போதுள்ள எதிர்திசை மாறாவிட்டால் அது, வரும் ஞாயிறில் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தையும், கியூபாவையும் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எர்மா-விடம் இருந்து பாதுகாப்புடன் இருக்குமாரு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

The impact of Irma hurricae

அடுத்த செய்தி