ஆப்நகரம்

தாயை உயிருடன் குழிக்குள் புதைத்த மகன்..! 3 நாட்களுக்கு பிறகு தோண்டியபோது...

தாயின் மருத்துவ செலவை பார்க்கமுடியாததால் அவரை உயிரோடு குழிக்குள் புதைத்த மகனின் அதிர்ச்சியூட்டும் செயல் சீனாவில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 9 May 2020, 5:21 pm
சீனாவின் ஹான்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் மா (58). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இவருடைய தாய் வாங்கிற்கு தற்போது 79 வயதாகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கிற்கு பக்கவாதம் ஏற்பட்டு வீல் சேரிலேயே முடக்கப்பட்டார்.
Samayam Tamil தாயை உயிருடன் குழிக்குள் புதைத்த மகன்


அவருக்கு மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மா சிறிது காலம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மா, தனது தாயை வீல் சேரில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், மீண்டும் அவர் மட்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து மாவின் மனைவி தனது மாமியாரை குறித்து கேட்டதில், அவரை உறவினர் வீடு ஒன்றில் தங்கவைத்துள்ளதாக பதிலளித்துள்ளார் மா.

ஆனால், இதில் சந்தேகமடைந்த மாவின் மனைவி ஜிங்பியன்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில், தனது தாயை நான் எங்கயும் தங்கவைக்கவில்லை, எனக்கு போதிய வருமானம் இல்லாத சூழலில், அவரை கவனித்துக்கொள்ள முடியாததால் உயிருடன் குழி தோண்டி புதைத்துவிட்டேன் என்றுள்ளார். இதை கேட்டு பேரதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில், குழிக்குள் மாவின் தாயார் முனங்கும் சத்தம் கேட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வில் தப்பு செய்தால் இதுதான் நடக்கும்: WHO எச்சரிக்கை

இதையடுத்து, அவரை குழிக்குள் இருந்து வெளியே எடுத்தபோது 3 நாட்களாக சோறு, தண்ணீர் இல்லாமல் சுவாசித்தபடி உயிரோடு இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டதோடு, அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். பின்னர், இதுகுறித்து மாவின் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி