ஆப்நகரம்

இலங்கை வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்; அச்சத்தில் உறையவைத்த பின்னணி!

இலங்கை வானிலிருந்து கடலில் விழுந்த மர்ம பொருள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TNN 20 Oct 2017, 3:32 pm
கொழும்பு: இலங்கை வானிலிருந்து கடலில் விழுந்த மர்ம பொருள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil the mysterious thing was seen in srilankan sky
இலங்கை வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்; அச்சத்தில் உறையவைத்த பின்னணி!


இலங்கையின் தென்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், மர்ம பொருள் ஒன்று வானிலிருந்து, கடலில் சென்று விழுந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமோ என்று பயத்தில் இருந்தனர். இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மர்ம பொருள் சீனாவின் மியென்கொன் விண்வெளி நிலையமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர்.

முன்னதாக விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து தவித்த மியென்கொன் விண்வெளி நிலையம், 2017 அக்டோபர் - 2018 ஏப்ரல் காலக்கட்டத்தில் புவியில் உடைந்து விழும் என்று சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

சுமார் 8 டன் எடையுள்ள விண்வெளி நிலையம், புவியில் விழும் போது 100 கிலோ துண்டுகளாகும் என்று கூறப்பட்டது.

இருப்பினும் இலங்கையில் விழுந்த மர்ம பொருள் குறித்து, சீனா எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் ஒருசாரார் மர்ம பொருளை விண்கல் என்றே கூறி வருகின்றனர்.

The mysterious thing was seen in Srilankan sky.

அடுத்த செய்தி