ஆப்நகரம்

அன்று அவமானம்; இன்று பிரபலம்!!

பிறந்த போது கோரமுகத்துடன் பிறந்ததால் பல்வேறு நிலைகளில் அவமானப்பட்ட நபர், இன்று பல்வேறு நபர்கள் போற்றும் பாப் இசை பாடகராக உருவெடுத்துள்ளார்.

TNN 31 Oct 2016, 5:04 pm
கம்பாலா: பிறந்த போது கோரமுகத்துடன் பிறந்ததால் பல்வேறு நிலைகளில் அவமானப்பட்ட நபர், இன்று பல்வேறு நபர்கள் போற்றும் பாப் இசை பாடகராக உருவெடுத்துள்ளார்.
Samayam Tamil the person now a popular pop singer who hatred for ugly face
அன்று அவமானம்; இன்று பிரபலம்!!


உகாண்டா நாட்டுக்காரரான காட்ஃப்ரே பாகுமா (47), பிடிக்கும் போது கோர முகத்துடன் விநோதமாக பிறந்துள்ளார்.

வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார். இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர். அதேசமயம், இவருக்கு இசையில் அதிகமாக ஆர்வம் இருந்துள்ளது.

இதனிடையே, பல்வேறு கேலி, கிண்டல்களுக்குள்ளான போதும், தனக்குள் இருந்த இசை ஆர்வத்தை வெளிக்கொனர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் வந்துள்ளார். தொடர்ந்து, தனது கடின முயற்சியால் இன்று அந்நாட்டின் பிரபல பாப் இசை பாடகராக இவர் உருவெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் இப்படி பிறந்ததால் சிறு வயதிலிருந்தே என்னை எல்லோரும் வினோதமாக தான் பார்ப்பார்கள். பின்னர் எனக்கு அது பழகிவிட்டது. எனக்கு சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம். என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். அதனை நான் உபயோகித்துக் கொண்டேன்.

அதன் பின்னர், நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, எனது மனைவி என்னை விட்டு போய்விட்டார். பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இசை துறையில் இன்னும் நான் பல்வேறு சாதனைகளை புரிவேன் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
The person now a popular pop singer who hatred for ugly face

அடுத்த செய்தி