தோக்லாம் பகுதியில் இருந்து ராணுவ படையினரை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்று இந்தியா சீனாவுக்கு பதில் அளித்துள்ளது.
சீனா வெளியிட்டிருந்த 15 பக்க அறிக்கை ஒன்றில் இந்தியா தோக்லாம் பகுதியில் தனது ராணுவ படையினரை நிறுத்தியுள்ளதற்கு கண்டனம் தொிவித்திருந்தது. உடனடியாக படைகளை திரும்ப பெறவேண்டும் என்றும் கூறியிருந்தது.
கடந்த ஜூன் 18ம் தேதியன்று இந்தியப் படைகள் சீனப் பகுதிக்குள் சுமாா் 400 மீட்டர் வரையில் முன்னேறி வந்து விட்டது என்றும் ஜூலை இறுதியில் மேலும் 40 இந்திய படையினர் நுழைந்து விட்டதாகவும் உடன் ஒரு புல்டோசரும் சட்டவிரோதமாக சீன எல்லைக்குள் வந்துள்ளதாக சீனா தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் தோக்லாம் பகுதியில் இருந்து படைகளைக் குறைப்பதோ அல்லது வாபஸ் பெறும் திட்டமோ இல்லை என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தோக்லாம் பகுதியை சீனா தனது பகுதி என கூறிவரும் நிலையில் அது பூட்டானுக்குச் சொந்தம் என்று இந்தியாவும் பூட்டானும் கூறி வருகின்றன.
சீனா, பூடான், சிக்கிம் பகுதிகள் சந்திக்கும் எல்லையில் தோக்லாம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
There is no plan to withdraw military personnel from the dhoklam
சீனா வெளியிட்டிருந்த 15 பக்க அறிக்கை ஒன்றில் இந்தியா தோக்லாம் பகுதியில் தனது ராணுவ படையினரை நிறுத்தியுள்ளதற்கு கண்டனம் தொிவித்திருந்தது. உடனடியாக படைகளை திரும்ப பெறவேண்டும் என்றும் கூறியிருந்தது.
கடந்த ஜூன் 18ம் தேதியன்று இந்தியப் படைகள் சீனப் பகுதிக்குள் சுமாா் 400 மீட்டர் வரையில் முன்னேறி வந்து விட்டது என்றும் ஜூலை இறுதியில் மேலும் 40 இந்திய படையினர் நுழைந்து விட்டதாகவும் உடன் ஒரு புல்டோசரும் சட்டவிரோதமாக சீன எல்லைக்குள் வந்துள்ளதாக சீனா தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் தோக்லாம் பகுதியில் இருந்து படைகளைக் குறைப்பதோ அல்லது வாபஸ் பெறும் திட்டமோ இல்லை என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தோக்லாம் பகுதியை சீனா தனது பகுதி என கூறிவரும் நிலையில் அது பூட்டானுக்குச் சொந்தம் என்று இந்தியாவும் பூட்டானும் கூறி வருகின்றன.
சீனா, பூடான், சிக்கிம் பகுதிகள் சந்திக்கும் எல்லையில் தோக்லாம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
There is no plan to withdraw military personnel from the dhoklam