ஆப்நகரம்

டிரம்புக்கு எதிராக துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததையடுத்து, அவருக்கு எதிராக துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

TNN 8 Dec 2017, 8:52 pm
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததையடுத்து, அவருக்கு எதிராக துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil thousands of people in turkey protest against trumps jerusalem move
டிரம்புக்கு எதிராக துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி


1967ஆம் ஆண்டு நிகழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியது. இதற்குப் பின் அங்கு லட்சக்கணக்கான யூதர்களை குடி அமர்த்தியதுடன் ஜெருசலேமை தங்கள் தலைநகரமாகவும் இஸ்ரேல் அறிவித்துக்கொண்டது. ஆனால், சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த சுய தம்பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார். மேலும், ஜெருசலேமிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த அங்கீகாரத்தை வழங்க இதுவே சரியான நேரம் என்றும் நிதர்சனமான உண்மைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இது என்றும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

டிரம்பின் இந்த நிலைபாட்டிற்கு சவுதி மற்றும் பாலஸ்தீனம் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, தனது வாழ்நாளில் பெரிய தவறை டிரம்ப் செய்துவிட்டார் என்று பாலஸ்தீன விடுதலை இயக்க செயலாளர் சாப் எரட்காட் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, டிரம்புக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமில்லாமல், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா , இந்தோனேசியா போன்ற நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.

இந்நிலையில், இன்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி