ஆப்நகரம்

இரண்டாக உடைந்து மூழ்கிய கப்பல்.. நடுக்கடலில் நடந்த சோகம்!

நடுக்கடலில் உடைந்து மூழ்கிய கப்பலில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 8:38 pm
துருக்கி நாட்டில் உள்ள கருங்கடல் பகுதியில் சரக்கு ஏற்றி வந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதனால் குறைந்தது மூன்று பேராவது உயிரிழந்திருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil arvin ship


பலாவு நாட்டின் கொடி பொருந்திய இந்த கப்பலின் பெயர் அர்வின். முதலில் இக்கப்பல் ரஷ்யாவை சேர்ந்தது என சந்தேகிக்கப்பட்டது. பிறகு, பலாவு கொடி பொருந்திய கப்பல் என தெரியவந்தது. எனினும், இந்த கப்பல் உக்ரைன் நாட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது.

பாகிஸ்தான் போராட்டத்தில் மோடி படம்... என்ன நடக்குது?
இக்கப்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 10 பேர் இருந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக திடீரென கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்த கப்பல் இரண்டாக உடைந்து கடலிலேயே மூழ்கிவிட்டது.

மொத்தம் ஆறு பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கப்பல் ஊழியர்கள் ஆவர். மேலும், மூன்று பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த கப்பல் ஜார்ஜியாவில் உள்ள பொட்டி துறைமுகத்தில் இருந்து பல்கேரியாவில் உள்ள பர்காஸ் துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. கப்பல் மூழ்கியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையளவு கட்டிடம்.. வானளவு தைரியம்.. சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளி!
கடும் மழை, பனி மற்றும் சூறைக்காற்றால் இந்த கப்பல் சேதமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கப்பல் இரு துண்டுகளாக உடைந்து கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி