ஆப்நகரம்

Time's 25: டைம் இதழின் மிகவும் செல்வாக்குள்ள 25 இளைஞர்களில், 3 இந்திய வம்சாவளி மாணவர்கள்

டைம் இதழின் மிகவும் செல்வாக்கு மிகுந்த இளைஞர்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இடம்பிடித்துள்ளனர்.

Samayam Tamil 22 Dec 2018, 8:15 pm
மிகவும் செல்வாக்குள்ள இளைஞர்கள் பட்டியலை ஆண்டுதோறும் டைம் இதழ் வெளியிட்டு வருகின்றது. இந்தாண்டு 3 இந்திய வம்சாவளி மாணவ- மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.
Samayam Tamil Kavya-Kopparapu


இந்திய அமெரிக்கர்களான காவ்யா கோப்பரப்பு, ரிஷப் ஜெயின் மற்றும் பிரிட்டிஷ் இந்தியர் அமிகா ஜார்ஜ் ஆகியோர் அந்த மாணவர்கள் ஆவர்.

ரிஷப் ஜெயின் :
8ம் வகுப்பு படிக்கும் ரிஷப் ஜெயின் அமெரிக்காவின் ஓரிகோனில் வசிக்கிறார். இவர் கணைய புற்று நோயை குணப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கியுள்ளார். 14 வயதான இவர் அதற்கான ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளார்.


இது கணைய புற்று நோய் பாதிப்பை மிகவும் தெளிவாக காட்டக்கூடியது என்பதால், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க எளிதாக அமையும்.

காவ்யா கோப்பரப்பு :
18 வயது காவ்யா கோப்பரப்பு ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். இவர் உருவாக்கியுள்ள புற்றுநோய் கட்டிகளை எளிதாக கண்டறியும் 3டி பிரிண்ட் போன்ற கணினியை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் மூளை புற்றுநோய் கட்டிகளின் திசுக்களின் ஸ்லைடுகளை ஸ்கேன் செய்ய முடியும். 30 ஆண்டுக்கு பின் மூளை புற்றுநோய்க்கான சிகிச்சை இவரால் மேம்படுத்தப்பட்டுள்ளது.


அமிகா ஜார்ஜ் :
இங்கிலாந்தையே திரும்பி பார்க்க வைத்தவர் அமிகா ஜார்ஜ். இவர் பெண்களுக்கான மாதவிடாய் பொருட்கள் வழங்குவதன் மூலம் மாதவிடாய் கால சிரமங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும், இந்த பிரச்னையை என அந்நாட்டு எம்.பி.,கள் வரை கொண்டு சென்றவர்.

பல சிறுமிகள் மாதவிடாய் நேப்கின் வாங்க முடியாமல் அன்றைய தினத்தில் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்



அவர் உருவாக்கிய #FreePeriods ஹேஸ் டேக் மூலம் இது குறித்து அரசாங்கம் அறிந்திருந்தும் அதற்கான தீர்வு காணவில்லை. என 200,000 கையெழுத்துக்களை மனு மூலம் சேகரித்தார். இதன் மூலம் இங்கிலாந்தின் 12 எம்.பிக்களின் ஆதரவு பெற்றார். இதனால் முறையாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்தை ஊக்கப்படுத்தியது.

அடுத்த செய்தி