ஆப்நகரம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலோவீன் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

அக்கம்பக்கத்தினர் ஹாலோவீன் பார்ட்டிக்காக பட்டாசு வெடிக்கப்படுவதாக நினைத்துள்ளனர்.

Samayam Tamil 30 Oct 2019, 6:18 pm

ஹைலைட்ஸ்:

  • லாஸ் ஏஞ்சல்ஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி. 9 பேர் காயம்
  • சுமார் 20 முறை சுட்ட சத்தத்தைக் கேட்டதாகத் தகவல்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 71818442
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் பார்ட்டியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் லாங் பீச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற ஹாலோவீன் பார்ட்டி நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உள்ளூர் போலீசார் கூறியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் இது பற்றி கேட்டபோது, அவர்கள் முதலில் ஹாலோவீன் பார்ட்டிக்காக பட்டாசு வெடிக்கப்படுவதாக நினைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

6 மாதத்தில் 14 சிகரங்களை எட்டிய சாகச மன்னன்

சரமாரியாக சுமார் 20 முறை சுட்ட சத்தத்தைக் கேட்டதாகவும் அதைக் கேட்டவுடன் அலறி அடித்துக்கொண்டு எதிர்த் திசையில் ஓடிவிட்டதாகவும் ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோ பதிவு ஒன்று உள்ளூர் தொலைகாட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எத்தனை பேர் பேர் என்றும் அவர்கள் எப்படித் தப்பினர் என்றும் தெரியவரவில்லை.

ஜப்பானை புரட்டிப் போடும் வெள்ளம்: 10 பேர் பலி

அடுத்த செய்தி