சவுதி அரேபியாவில் மன்னர் சல்மானின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய திட்டமிட்டதாக அந்நாட்டு இளவரசர்க்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் 84 வயதாகும் சல்மான் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. பட்டத்து இளவரசாக முடிசூடியுள்ள இவரது மகன் முகமது பின் சல்மான் அடுத்த சவுதி மன்னராகவுள்ளார்.
மன்னர் சல்மான் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருப்பதால், ஆட்சியை பெரும்பாலும் அவரது மகன் முகமது பின் சல்மான்தான் கவனிக்கிறார்.
இச்சூழலில், மன்னர் சல்மானின் உடன்பிறந்த தம்பி அகமது பின் அப்துல்அசீஸ் (78), அகமதுவின் மகன் முகமது பின் நயீப் (60), மற்றும் இவரது சகோதரர் நவாப் பின் நயீப் ஆகியோர் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சோதனை; 10 பேர் உயிரிழப்பு
ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற தேச துரோக செயலுக்காக வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மன்னர் சல்மான் நலமுடன் இருப்பதைக் காட்டும் வகையில், அவர் புதிதாக நியமிக்கப்பட்ட இரு சவுதி அரசின் தூதுவர்கள் இருவரைச் சந்தித்து வாழ்த்து கூறும் காட்சி அந்நாட்டு ஊடகங்களில் வெளிவந்தது.
கடந்த வியாழக்கிழமை மன்னர் சல்மான் உடன் பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் ஆலோசனை நடத்தினார் எனவும் ஊடகங்கள் கூறியுள்ளன.
பயப்படாதீங்க... நாய்களால் கொரொனா வைரஸ் பரவாது
இதுபற்றி முதல் முறையாக செய்தி வெளியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த Wall Street Journal பத்திரிக்கை, சவுதியில் மன்னர் சல்மானின் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்துக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உதவியுள்ளனர் எனக் கூறியிருக்கிறது.
2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசரானது முதல் இளவரசர் முகமது பின் நயீப்பின் நகர்வுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
மன்னரின் தம்பியே கைது செய்யப்பட்டுள்ளதால், இனி சவுதி அரச குடும்பத்தில் இருக்கும் யாரும் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் உடனே கைது செய்யப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ்: அறிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
மன்னர் சல்மான் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருப்பதால், ஆட்சியை பெரும்பாலும் அவரது மகன் முகமது பின் சல்மான்தான் கவனிக்கிறார்.
இச்சூழலில், மன்னர் சல்மானின் உடன்பிறந்த தம்பி அகமது பின் அப்துல்அசீஸ் (78), அகமதுவின் மகன் முகமது பின் நயீப் (60), மற்றும் இவரது சகோதரர் நவாப் பின் நயீப் ஆகியோர் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சோதனை; 10 பேர் உயிரிழப்பு
ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற தேச துரோக செயலுக்காக வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மன்னர் சல்மான் நலமுடன் இருப்பதைக் காட்டும் வகையில், அவர் புதிதாக நியமிக்கப்பட்ட இரு சவுதி அரசின் தூதுவர்கள் இருவரைச் சந்தித்து வாழ்த்து கூறும் காட்சி அந்நாட்டு ஊடகங்களில் வெளிவந்தது.
கடந்த வியாழக்கிழமை மன்னர் சல்மான் உடன் பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் ஆலோசனை நடத்தினார் எனவும் ஊடகங்கள் கூறியுள்ளன.
பயப்படாதீங்க... நாய்களால் கொரொனா வைரஸ் பரவாது
இதுபற்றி முதல் முறையாக செய்தி வெளியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த Wall Street Journal பத்திரிக்கை, சவுதியில் மன்னர் சல்மானின் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்துக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உதவியுள்ளனர் எனக் கூறியிருக்கிறது.
2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசரானது முதல் இளவரசர் முகமது பின் நயீப்பின் நகர்வுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
மன்னரின் தம்பியே கைது செய்யப்பட்டுள்ளதால், இனி சவுதி அரச குடும்பத்தில் இருக்கும் யாரும் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் உடனே கைது செய்யப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ்: அறிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்