ஆப்நகரம்

லண்டனுக்குச் சென்று தடையை உடைக்குமா டிக்டாக்..?

சீனாவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசுக்கு தேவையான மின்னணுத் தகவல்களை வழங்க வேண்டும் என்பது சட்டம்.

Samayam Tamil 20 Jul 2020, 9:24 am
இந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், நிறுவனத்தின் தலைமை இடத்தை லண்டனுக்கு மாற்ற பணிகள் நடந்து வருகிறது.
Samayam Tamil இனி டிக்டாக் சீன ஆப்பா இருக்காது... லண்டன் மனமாற்றம்!
இனி டிக்டாக் சீன ஆப்பா இருக்காது... லண்டன் மனமாற்றம்!


சீனாவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு சில கிடுக்கிப்பிடி சட்டம் போட்டுள்ளது. குறிப்பாக, அரசுக்கு தேவையான மின்னணு தகவல்களை தடையின்றி தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

இந்த சட்டத்தின்படி டிக்டாக் உள்பட சீன நிறுவனத்தி ஆப்களை பயன்படுத்தும் நபர்கள் குறித்த ரகசிய தகவல்களை சீன அரசு எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இதை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய அரசு டிக்டாக் ஆப்பிற்கு தடை விதித்தது.

உலகம் முழுவதும் டிக்டாக் ஆப் பிரபலமானது. இந்நிலையில் இந்திய அரசின் இந்த தடை நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவும் தடை விதிக்க திட்டமிட்டு வருக்றது. சீன ஆப் என்பதாலேஎ இந்த நெருக்கடிகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த டிக்டாக் நிறுவனம், தலைமை இடத்தை வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டு வருகிறது.

ஜம்மூ: ராணுவ வீரர்களிடம் ராஜ்நாத் சிங் சொன்னது என்ன?

இதற்காக இங்கிலாந்தில் உள்ள லண்டனை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் டிக்டாக் நிர்வாகம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டால் டிக்டாக் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தடைவிலக்கு பெற வாய்ப்புள்ளதாம். அப்படி தடை விலக்கு பெற முடியவில்லை என்றாலும், வேறு பெயரில் மீண்டு வரலாம் என வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி