ஆப்நகரம்

சீனா அரசை விமர்சித்த பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கு முடக்கம்

“அங்கு உய்குர் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். வன்புணர்வு செய்யப்படுகிறார்கள்.’’ என்று கூறி இதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள், பகிருங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

Samayam Tamil 29 Nov 2019, 6:19 pm

ஹைலைட்ஸ்:

  • சீனா பற்றி கூறியதால் கணக்கு முடக்கப்படவில்லை என டிக்டாக் விளக்கம் அறித்தது.
  • டிக்டாக் கூறும் விளக்கத்தை தான் நம்பிவில்லை என அசிஸ் கருத்து கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil getmefamouspartthree
சீனா அரசு உய்குர் முஸ்லிம்களை முகாம்களை அடைத்து கொடுமைப்படுத்துவது பற்றி வீடியோ வெளியிட்ட அமெரிக்கப் பெண்ணின் கணக்கை ‘டிக்டாக்’ நிறுவனம் நீக்கியது.
அமெரிக்காவை சேர்ந்த பெரோசா அசிஸ் என்ற பெண் தனது ‘டிக்டாக்’கில் அழகு குறிப்பைக் கூறுவது போல ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அதில் சீனாவில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசியிருந்தார்.

வீடியோவில் ஆரம்பத்தில் அழகுக் குறிப்பைக் கூறும் அசிஸ் பின், ‘‘இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் இதே போனில் சீனாவில் என்ன நடக்கிறது என்றும் பாருங்கள்.” என்கிறார்.

“அங்கு உய்குர் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். வன்புணர்வு செய்யப்படுகிறார்கள்.’’ என்று கூறி இதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள், பகிருங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த வீடியோவை பல லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். இதனால் டிக்டாக் நிறுவனம் அசிஸின் டிக்டாக் கணக்கை முடக்கியது. இதற்கு பிற சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

தாலிபன்களோடு மீண்டும் பேச்சுவார்த்தை தொடக்கம்

இதனால், அசிஸின் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. தற்காலிகமாக கணக்கு நீக்கப்பட்டதற்காக ‘டிக்டாக்’ நிறுவனடம் மன்னிப்பு கோரியுள்ளது. அதில், உய்குர் முஸ்லிம்களை பற்றி கூறியதால் கணக்கு முடக்கப்படவில்லை என்றும் பின்லேடன் பற்றிய கூறிய வீடியோவுக்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் விளக்கியுள்ளது.

இதனிடையே, பிபிசிக்கு பேட்டி அளித்த அசிஸ், “ஆப்கானிஸ்தான், காஷ்மீர், கொலம்பியா, ஏமன், சோமலியா, வெனிசுலா என இடங்களிலும் இதைப் போல முஸ்லிம்கள் கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஏன் அமெரிக்காவிலும் அது நடக்கிறது. அதைக் கூற நான் பயப்படவில்லை.” என்றார். மேலும், டிக்டாக் கூறிய விளக்கம் உண்மையானது என தான் நம்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் கோபிரைட் மரணம்

அடுத்த செய்தி